தில்லி வன்முறை: வெறும் வார்த்தையல்ல நீதி
உரை
நீதிபதி முரளிதர்
வெறும் வார்த்தையல்ல நீதி
கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி புதுதில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் புதுதில்லி மதக்கலவரம் தொடர்பாக இரு மிக முக்கிய ஆணைகளைப் பிறப்பித்தார். இவை மூன்றுநாட்களுக்கு மேலாக நடந்தேறிய படுகொலைகளைத் தடுத்து நிறுத்த அரசு நிறுவனங்களோ நீதிமன்றமோ முன்வருமா என்று ஏங்கிக்கிடந்த சமூகச் சிந்தைகொண்ட தில்லிவாசிகளுக்குப் பெரும் ஆறுதலை அளித்தன. ஆனால் ஆணைபிறப்பித்த அதேநாள் நள்ளிரவில் நீதிபதி முரளிதர் பஞ்சாப் மற்றும் ஹரியான மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணிஇடமாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து தில்லி மதக்கலவரம் தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
1984இல் சீக்கியர்களுக்கு எ