இயாம்: கொள்ளைநோய்க் கிராமம்
கட்டுரை
இயாம்: கொள்ளைநோய்க் கிராமம்
சுகுமாரன்
‘வெல்லிங்டன்’ என்ற என்னுடைய நாவலின் முதற் பகுதி உதகமண்டலம் எவ்வாறு மலைநகரமாக உருவானது என்பதைப் பற்றியது. அந்த வரலாறு தொடர்பாகப் பல ஆவணங்களை ஆராய்ந்து தரவுகளைத் திரட்ட வேண்டியிருந்தது. நகர உருவாக்கத்தின்போது அந்த நிலப்பகுதியில் நடைபெற்ற மக்கள் வாழ்க்கை, இயற்கைச் சூழல், தட்பவெப்பம் ஆகியவை குறித்த விவரங்களைத் தொகுத்துக் கொண்டேன். கூடவே நிலவிய நோய்களைப் பற்றிய தகவல்களையும் தேடினேன். அன்று இந்தியக் குடிமைப்பணியிலிருந்த டபிள்யூ ஃபிரான்சிஸ் தொகுத்த நீலகிரி மாவட்ட அரசிதழ் (‘மெட்ராஸ் டிஸ்ட்ரிக்ட் கெஸட்டீர்ஸ்&rsq