ஏன் இப்படிச் செய்தீர்கள்?
கட்டுரை
ஏன் இப்படிச் செய்தீர்கள்?
களந்தை பீர்முகம்மது
உலகம் முழுவதிலும் பரவிய கொரோனா வைரஸின் தயாரிப்பாளர் சீனா என்றால், அதன் விநியோகஸ்தர் முஸ்லிம்கள் என இந்துத்துவச் சக்திகள் பரப்புரையை மேற்கொண்டிருந்தன. இந்த வளமான கற்பனை நிறைய பேரைப் பிடித்துக்கொண்டது.
மதவாதச் சொல்லாடல்களின் கீழ் ஏற்கெனவே இந்தியா இரு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது. இச்சூழலில், கொரோனா வைரஸ் கிரியா ஊக்கியாக இந்துத்துவர்களின் கையில் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த வேகமான செயல்பாட்டுக்குப் பின்னணியில் மோடியின் தலைமையிலான அரசு இருந்தது. ஏழாண்டுக் காலமாக இந்திய நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் பெரும்பாலான