அற்றைத் திங்கள் சார்ஸின் பிடியில்
கட்டுரை
அற்றைத் திங்கள் சார்ஸின் பிடியில்
மு. இராமனாதன்
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்’ பாரி மகளிர் அங்கவையும் சங்கவையும் பாடிய பாடல். “அன்று வந்ததும் இதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா. அன்று எங்கள் தந்தை வேள் பாரி இருந்தார். பறம்புமலை எம்மிடம் இருந்தது. இன்று எங்கள் மலை எம்மிடம் இல்லை, எங்கள் தந்தையும் இல்லை.” புறநானூறு தெரிந்திருந்தால் ஹாங்காங் மக்களும் இந்தப் பாடலை இப்போது பாடியிருப்பார்கள். ஆனால், மூலப் பாடலைத் திருப்பிப் போட்டிருப்பார்கள். புறப்பாடலில் தொனிக்கும் அவலத்தைப் பெருமிதமாக மாற்றியிருப்பார்கள். ‘அற்றைத் திங்கள் சார்ஸ் வந்தது, அல்லலுற்றோம்