மகத்தான பெருந்தொற்று நாவல்கள் நமக்குப் போதிப்பவை
கட்டுரை
மகத்தான பெருந்தொற்று நாவல்கள் நமக்குப் போதிப்பவை
ஓரான் பாமுக்
கடந்த நான்கு வருடங்களாக ஒரு சரித்திர நாவலை எழுதி வருகிறேன். 1901இல் ஆசியாவில் இலட்சக்கணக்கானவர்களையும் ஐரோப்பாவில் வெகு சிலரையும் மட்டுமே பலிகொண்ட ‘மூன்றாவது சர்வதேசக் கொள்ளை நோய்’ என்று அறியப்படும் பியூபானிக் பிளேக் தொற்று பற்றிய நாவல் இது. ‘பிளேக் இரவுகள்’ (‘Nights of Plague’) என்ற இப்புதிய நாவலைப் பற்றி அறிந்துகொண்ட நண்பர்களும் குடும்பத்தினரும் பத்திரிகை ஆசிரியர்களும் நிருபர்களும் இரண்டு மாதங்களாக என்னைக் கேள்விக் கணைகளால் துளைத்துவருகின்றனர்.
அவர்க