தீராத பயம்
கதை
மு. குலசேகரன்
தீராத பயம்
தெருக்கதவை வெளியில் சாத்திவிட்டு மூக்குக்கும் வாய்க்கும் சேர்த்து கைக்குட்டையை இறுக்கிக் கட்டிக்கொண்டேன். வீட்டுக்குள் பெண்ணும் பையனும் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்தார்கள். அடுக்களையிலிருந்து மனைவி மீண்டும் ஒருமுறை “சீக்கிரமா திரும்பி வந்துடுங்க” என்றாள். பதிலெதுவும் சொல்லாமல் தெருவிலிறங்கி நடந்தேன். பக்கத்து வீட்டுத் திண்ணையில் பெண்கள் கூடி உட்கார்ந்து அடிக்குரலில் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பிள்ளைகள் தெருவில் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தன. கடைசி வீட்டு வாசலில் கிழவி கால்களை நீட்டி அமர்ந்திருந்தாள். மற்றொரு காலைப் போல் ஊன்று கோல் இணையாகக் க