எதிர்வினை
எதிர்வினை
மார்ச் மாத இதழில் காலஞ் சென்ற எனது கணவர் பேராசிரியர் C.N. நடராசனைப் பற்றி ஆ.இரா. வேங்கடாசலபதி என்பவர் எழுதிய கட்டுரை வந்திருக்கிறது. அந்தக் கட்டுரையைப் பார்த்தவுடன் நானும் எனது குடும்பத்தினர் அனைவரும் மிகவும் திகைப்புற்று அதிர்ச்சிக்கு உள்ளானோம்.
முதலில், எனது கணவர் பொதுவெளியில் சமூகப் பணியாற்றியவர் அல்லர். அவர் தனக்கென்று வாழ்க்கை முறையைப் பின்பற்றிப் பேராசிரியர் பணியைச் செவ்வனே செய்து தனிமனித வாழ்க்கையை வாழ்ந்தவர். அத்தகையவரை விமர்சித்தது இதழியலின் அறம் சார்ந்தது அல்ல.
எனது கணவர் ஏறக்குறைய 36 வருடங்கள் ஆசிரியர் பணியில் இருந்து பணி ஓய்வு பெற்று, அதற்குப் பின்னரும் ஆசிரியர் பணி செய்து, தான் படித்த சமூகவியல் துறைக்கு இயன்ற பங்களிப்பை அளிப்பது என்ற கோட்பாட்டுடன் வாழ்ந்தவர்.
இந்தக் கட்டுரையின் தலைப்பு ‘இணரூழ்த்தும்’ என்று இருக்கிறது. இந்த வார்த்தையின் பின்னணி திருக்குறளில் இருந்து எடுத்து “கெத்தான மலராக இருந்தும், தான் படித்தவற்ற