சின்னஞ்சிறு இருமல், நாற்பதில் நிற்கும் கொற்றவை
கவிதைகள்
சுபா செந்தில்குமார்
சின்னஞ்சிறு இருமல்
ஒரு வறட்டு இருமல்
காப்பீட்டுப் பத்திரம் தொடங்கி
சொத்துப்பத்திரம் வரை
அனைத்தையும் நினைவூட்டுகிறது.
முனை மழுங்கிய வன்மங்களை
வீசி எறிந்துவிட்டு
தேய்ந்துபோன முழங்காலில் மண்டியிட்டுத்
தன் பாவமன்னிப்பைக் கோருகிறது.
எஞ்சியிருக்கும் சிலுவையொன்றில்
தன்னை அறைந்துகொள்கிறது.
தலையைக் குனிந்தபடி
விடைபெறும் சவப்பெட்டியொன்றில்
தன் முகம் புதைத்து அழுகிறது.
உதறப்பட்ட துவராடையிலிருந்து
பற்றற்ற புழுதியாகிக் காற்றில் கரைகிறது.
தன்னிடமே திரும்பும்