துக்கம்
கவிதைகள்
ஜி.எஸ். தயாளன்
துக்கம்
1
தந்தைகளைப் போலல்ல இத்தந்தை
கலெக்டர் டாக்டர் கனவுகளின்றி
என்றென்றைக்கும் அவரது விருப்பம்
இன்றிரவு தனது மகள் தூங்கிவிட வேண்டும்
விழித்தபடியே காணும்
கோரக் கனவுகளிலிருந்து
துயில் நிலைக்குள் அவள் நுழைய வேண்டும்
யார் துணையுமற்று ஒருநாளையாவது
அவள் கடக்க வேண்டும்
அவ்வொரு நாள்
இரு நாட்களாகப் பல நாட்களாக
பல்கிப் பெருக வேண்டும்
பள்ளி பற்றிய கவலையை அவளும்
அவளது கல்வி பற்றிய கவலையை அப்பாவும்
துறந்து ஒராண்டாகிறது
அவர்கள