முகம்
கவிதை
ச. துரை
முகம்
உறங்கும்போது மட்டும்
பழுப்பு நிறமாக மாறியிருந்த
எனது முகத்தை அன்று பார்த்தேன்
உண்மையிலே நித்திரையில்
எனது முகம் எவ்வளவு சாந்தம்
யாரையும் எதிர்பார்க்காத
எதன் மீதும் பொறுப்பற்ற
மயானத்தனமான அமைதி
முகத்தை நினைத்தால்
இப்போதும் குளிர்ச்சி பரவுகிறது
உதிரவோ அழுகவோ போகாத
கனி முகத்தை அப்படியே
உடல் மரமாகத் தாங்கி வைத்திருந்தால்
எத்தனை அழகான காலமோட்சம்
ஆனால் துரதிர்ஷ்டம் பாருங்களேன்
அந்தத் திவ்ய சொரூப முகத்தைப் பார்த்து
மயங்கி உறைந்திருக்கையில்