ஊர் அடங்கி
கவிதைகள்
எம்.எம். பைசல்
ஊர் அடங்கி
1
அருகிக்கொண்டிருக்கிறது தனிமை
கொஞ்ச நேரம் சன்னல்களில்
தம்பியைத் தூக்கிக்கொண்டு அல்லோலம்
அதன் பின்
அசான் பக்கெட்டில் சின்னக் காகிதக் கப்பலை விடுகிறான்.
அலை இல்லாத கடலில்
காகிதம் கொவுந்து கப்பல் மூழ்குகிறது.
தனிமையைத் துரத்தியடிக்க முடியவில்லை
நிர்ப்பந்தமான தனிமை
சைக்கிளின் பின்னால்
அமர்கிறது
மிதிக்கத் தொடங்கிவிட்டான்
தெருவைக் கடந்து சாலையை நோக்கி
2
இலையின் நரம்புகளை மெல்ல வருடினேன்
இலையைவிட்டு
நரம்புகள்
என் கை