‘ஒரு ஐந்து நிமிடம் மட்டும் இருந்திருந்தால். . .’
கவிதைகள்
வே.நி. சூர்யா
“ஒரு ஐந்து நிமிடம் மட்டும் இருந்திருந்தால்...”
இதைத் தினசரி ஓரிருமுறையாவது கேட்டு விடுகிறேன்
ரயில்வே நிலையங்களில்
மருத்துவமனைகளில்
சாலையோரங்களில்
இதுதான் பிரசித்திபெற்ற பிரச்சினை போலும்
சரியாக ஐந்து நிமிடம் தப்பி
ஹேண்ட் பேக்கினைப்
பிடுங்கிக்கொண்டு ஒட முயன்றவனைக்
கும்பல் கூடிநின்று
உதைத்துக்கொண்டிருப்பதை
பார்த்த பிறகு
நான் முடிவெடுத்து விட்டேன்
ஒரு ஐந்து நிமிடம் மட்டும்
இருந்திருந்தால். . இருந்திருந்தால் என
இனி யாரோ சொல்லும்போதெல்லாம்
சரி தவற்றை எல்லாம் தாண்டி
ஒரு ஐந்து நிமிடம் ஆக
நான்