‘மீ காய் கெரூ’
‘மீ காய் கெரூ’
ராமசாமி முதலி ஜரிகைப் பாவைச் சுத்தம் செய்து சுருட்டிக்கொண்டிருந்தான். பள்ளியிலிருந்து திரும்பும் பெண்கள் புத்தகப் பொதியை ஒயிலாகத் தூக்கிக்கொண்டு உற்சாகமாய்ப் பேசியபடி வந்து கொண்டிருந்தனர்; பக்கத்துவீட்டுக்காரர் சட்டையில்லாத மேனியில் போர்த்திருந்த துண்டு பூனூலை வெளியில் காட்டி ஹோட்டலிலிருந்து கூஜாவில் காபி வாங்கிக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்தார். இந்த அவை நடுவில் தலைமை வகிப்பவன்போல் தடபுடலாகப் பேசினான் கச்சன்னா.
கச்சன்னா என்ற சொல்லுக்குக் கொண்டைக் கடலை என்று அர்த்தம். பெற்றோர் இட்ட பெயர் சாமிநாதன். குழந்தைப் பிராயம் முதல் என்ன சாப்பிடுகிறாய் என்று எப்போது யார் கேட்டாலும் ‘கச்சன்னா சுண்டல்’ என்று டக்கெனக் கூறிவந்ததால் அவனுடைய இயற்பெயர் வழக்கொழிந்து கச்சன