கற்பனைக்கு எட்டா வாழ்வு
சிறப்புப் பகுதி
பொருநை பக்கங்கள்
கற்பனைக்கு எட்டா வாழ்வு
இல.சொ. சத்தியமூர்த்தி
படைப்புக்காகவே எம். வி.வி அனுபவங்களைத் தேடிப்போனாரா இல்லை, அவரைத் தேடி ஓடிவந்தனவா என்பது அவர் வாழ்வையும் படைப்புகளையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கும்போது ஒரு புதிராகவே இருக்கிறது இயற்கை வரைந்த எல்லைக் கோடுகள்தான் நதிகள் என்ற கூற்று கும்பகோணத்திற்கு முற்றிலும் பொருந்தும். காவிரி, அரசலாறு என்ற இரு ஆறுகள்தான் அந்நகரின் பூகோள நீர்க்கோட்டு எல்லைகள். அரசலாற்றின் வடகரையில் அமைந்த தோப்புத் தெரு, ராமச்சந்திரபுரத் தெரு, சௌராஷ்டிரா புதுத் தெரு, நடுத்தெரு இவற்றில் பட்டுக் கைத்தறி நெசவாளர்கள் அடர்த்தியாக வாழ்ந்து வந்தனர்.