நரசிம்மம்
கதை
நரசிம்மம்
ஆசி கந்தராஜா
வனுடைய பெயரை இதுவரை யாரும் முழுதாகச் சொன்னது கிடையாது. ஆசிரியர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் அனைவரும் பெயரைச் சுருக்கி, ‘தமிழ்’ என்றே அழைத்தார்கள். பாடசாலைப் பதிவு இடாப்பில் மட்டும் அவனுடைய பெயர், ‘ஈழத்-தமிழன்-பிரபாகரன்’ என்றிருந்தது. இதில் அவனது முதற்பெயர், நடுப்பெயர், குடும்பப்பெயர் என்ற பிரிவினை இல்லை. இந்த மூன்றும் சேர்ந்த ஒன்றே, அவனது முழுப்பெயர். பள்ளிக் கூடத்தில் அவனைச் சேர்க்கும்போது ‘பெயரைச் சற்றுச் சுருக்கிப் பதியலாமே’ என்றார் தலைமை ஆசிரியர். என்னுடைய மகனின் பெயர் அதுதான், அது முழுமையாகப் பதியப்பட வேண்டுமெனப் பிடிவாதமாக நின்றாள் புனிதவதி. இதேமாதிரியான பிரச்சனை, வன்னியில் உலர் உணவுப் பங்கீட்டுக்குப் பதிவுசெய்தபோதும் ஏற்பட்டது. கிராமசேவகர் ஒரு சிங்களவர், இனத்துவேசம் கொண்டவர். பெயரை முழுமையாகப் பதியாது இழுத்தடித்தார். புனிதவத