நூற்றாண்டுக்கு முந்தைய கொள்ளை நோய்
கட்டுரை
நூற்றாண்டுக்கு முந்தைய கொள்ளை நோய்
ஸ்டாலின் ராஜாங்கம்
மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் வெகுமக்கள் தங்கள் ஊர்களிலும் வீடுகளிலும் வேப்பிலை செருகி மஞ்சள் தெளித்துக் கொரானாவைத் தடுத்துக்கொள்ளும் செய்திகள் கிடைக்கின்றன. கொரனாவைக் கொள்ளை நோய் என்று சொல்வது குறித்து விவாதங்கள் இருக்கலாம். மக்கள் கொள்ளை நோய்க்கான அம்சங்களோடுதான் அதனை அணுகுகிறார்கள். இத்தகைய அனுபவம் நூறாண்டுகளுக்குப் பிறகு நமக்கு ஏற்பட்டிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காலரா, அம்மை, பிளேக் போன்ற நோய்கள் மக்களின் உயிரைக் கொள்ளைகொண்டன. மருந்துகள் கண்டுபிடிக்கப்படும்வரை அவற்றை மக்களும் அரசும் எவ்வாறு எதிர்கொண்டனர், அறிந்துகொண்டனர் என்பதைப் பற்றிய ஆய்வுகள் நடக்க வேண்டும். அந்தவகையில் ஒரு தமிழ்ப்பகுதி அனுபவம் இக்கட்டுரையில் எடுத்துக்காட்டப்படுகிறது.
<p style="text-align:cen