அசோக் வாஜ்பாயி கவிதைகள்
இந்தி இலக்கிய உலகில் மிக முக்கியமான கவிஞர், விமர்சகர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். எண்பது வயதிலும் தளராது தொடர்ந்து உற்சாகத்துடன் எழுதி வருபவர் அசோக் வாஜ்பாயி. இந்தியக் குடிமைப் பணி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அவர் தன் பணிக்காலத்தில் இந்தியாவில் கலை தொடர்பான பல அமைப்புகளை நிறுவினார். போபாலில் அமைந்துள்ள ‘பாரத் பவன்’ அவ்வாறான அமைப்புகளில் புகழ்பெற்ற ஒன்று. இந்திய அரசின் கலாச்சாரத் துறைச் செயலர், மகாத்மா காந்தி சர்வதேச ஹிந்தி பல்கலைக்கழகத் துணைவேந்தர், சங்கீத் நாடக அகாதமியின் நிர்வாகக் குழு உறுப்பினர் எனப் பல்வேறு பதவிகளையும் வகித்தவர்.
இதுவரை முப்பத்தி எட்டு கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. இந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளியாகும் எட்டு வெவ்வேறு இதழ்களின் நிறுவனராக ஆசிரியராக இருந்திருக்கிறார். ‘கஹி(ன்) நஹி(ன்) வஹி(ன்)’ என்ற ஹிந்திக் கவிதைத் தொகுப்புக்காக 1994ஆம் ஆண்டு