‘கரம் சிரம் புறம் (அகம்) நீட்டாதீர்’ வாழ்க்கை . . .
கவிதை
‘கரம் சிரம் புறம் (அகம்) நீட்டாதீர்’ வாழ்க்கை...
றாம் சந்தோஷ்
எனக்குப் பொதுவாகவே மூக்கைப் பிடிக்காது
அதன் துருத்திக்கொண்டிருக்கும் சுபாவம் குறித்த
ஒவ்வாமையில் அதற்கு நாக்கு என்று பெயர்வைத்து
அதை வாயில் போட்டு அடைத்துவைத்தேன்.
கண்களின் போதாமையால் அவற்றை இமைகளிட்டுச் சாத்தியே வைப்பது
எனது வழமைகளில் ஒன்று.
ஒருமுறை காக்காய்கள் கரைந்துகேட்க அவற்றிற்கு என் காதுகளிரண்டைத்
தின்னக் கொடுத்த கதையின்படி
என் சிரம் ஏற்கெனவே அவைகளற்றுத்தான் இருந்தது.
இந்த வாய்மட்டும் எதற்கு என்று அவள் என்னைச் சீண