கவிதைகள்
கவிதைகள்
சிபிச்செல்வன்
இரண்டு பச்சைக் கிளிகள் கிள்ளை மொழியில் பேசிக்கொண்டு இருந்தன.
முதல் கிளி பேசியது
இரண்டாம் கிளி பேசியது
என
இரண்டுமே எனக்குப் புரியவில்லை
அவற்றிடம் நான் பேச முயற்சி செய்ய
மெல்ல யெழும்பி
வானம் முழுதும் பறந்தன
இக்கணத்தில் ஓராயிரம் குரல்கள் என் காதுக்குள்
பேரிரைச்சல்
•
இலைகள் பழுத்து உதிர்ந்து கிடக்கும்
பழங்கள் வெடித்துக் கொட்ட அணில்கள் கடித்துக் கொட்டம்
பூக்கள் பறிப்பார் இன்றி வாடிவதங்கிப் போகின்றன.
இன்னும் சூறைக்காற்றில் மரங்கள் வேரோடு சாய்ந்துகிடக்கும்.
ஒரு சிறு சலனமில்லாமல்
பார்த்துப்
பார்த்துக்
கோடைகாலப் பாறையில் ஏறிய சூடாய்த் தகதகவெனக்
கொதித்து ... <br /