கோடைகால ஒருத்தி, முதல் காதலியின் கணவன்
கவிதைகள்
செந்தி
கோடைகால ஒருத்தி
இக்கோடையில்
ஒரு துளி கூடவா உன் காட்டில் விழவில்லை
ஒரு மலர்கூடவா உன் வனத்தில் பூக்கவில்லை
மேலும்
ஒருமுறை கூடவா மஞ்சளாகவில்லை உன் முத்தம்
எங்கிருக்கிறாள் உன் மழைப்பெண்
எங்கிருக்கிறது உன் வனப்பறவை
உனை அக் கிரேக்கச் சிலையென
சுட்டுகையில் சற்று நாணம் கொள்வாயே
தேவதையின் மற்றொரு பெயரானவளே
விளிக்கும்போது புருவம் உயர்த்துவாயே
அதிராத உன் நடையில் ஆயிரம்
புன்னகைகள் நிழலாகுமே
மெய்யாலுமே வினவுகிறேன்
எந்தப்புதரில் சுருண்டுகிடக்கிறாய்