சங்கர் ஆணவப் படுகொலை நியாயம்தானா தீர்ப்பு?
கட்டுரை
சங்கர் ஆணவப் படுகொலை
நியாயம்தானா தீர்ப்பு?
இ. பாண்டியன்
2016 மார்ச் மாதம் 13ஆம் தேதி உடுமலைப் பேட்டையில் நடத்தப்பட்ட கொலை பலத்த அதிர்ச்சியை உண்டாக்கியது. அதுவொரு சாதி ஆணவக்கொலை. சங்கர் படுகொலை செய்யப்பட்டார். அவர் மனைவி கௌசல்யா பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிர் தப்பினார். இதில் சங்கர் ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்த்தவர். கௌசல்யா இடைநிலை வகுப்பை சேர்த்தவர். அதுவே கொலைக்கான காரணம் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அவ்வழக்கு தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு அண்மையில் வெளியானது. அது கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் சந்தித்திருக்கிறது. அவ்வழக்கில் என்ன நடந்திருக்கிறது? எவையெல்லாம் விடுபட்டிருக்கின்றன? என்பதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
<img alt="" src="/med