பிச்சாண்டவர், ஒளிநடனம், ஸ்படிகலிங்கம்
கவிதைகள்
சசிகலா தேவி
பிச்சாண்டவர்
நீ பிச்சைக்காரனாய்ப் போ
பிச்சை பிச்சை என்று கத்து
ஆத்மாநாமின் கவிதை
சன்னமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறது
எல்லையற்ற பெருவெளியைக்
கடக்க ஐந்து ரூபாய் நாணயத்தைத்
தானமிட்டால் போதுமென்று
நினைக்கிறான் பக்தன்
நாணயத்தைச்
சுண்டிவிட்டு ரோகியைக்
கடந்துபோகிறான்
முதலாமவன்
உடம்பெங்கும் திருநீறு பூசி
ருத்திராட்சம் அணிந்து
திருவோட்டுடன் பிச்சை பிச்சை
என்கிறார் சிவாச்சாரியார்
தானமிட்ட இரண்டாமவன்
தலைகுனிந்து மோ