சாகாவரம் பெற்ற படைப்பாளி
அஞ்சலி: சா. கந்தசாமி (1940 – 2020)
சாகாவரம் பெற்ற படைப்பாளி
கோமல் அன்பரசன்
“I am a school dropout from Tamil Nadu” (நான் பள்ளிக் கல்வியை முடிக்காத தமிழ்நாட்டுக்காரன்) – பிப்ரவரி 2020இல் சாகித்ய அகாதெமி டெல்லியில் நடத்திய இலக்கிய விழாவில் சா. கந்தசாமி இப்படி தன்னுடைய உரையைத் தொடங்கியவுடன் மொத்த அரங்கமும் அவரை உற்றுக் கவனித்தது. அவரது ஆளுமையின் உயரத்திற்குக் கொடுக்கப்பட்ட அறிமுகத்திற்கும் உரையின் முதல் வரிக்கும் இருந்த வித்தியாசம் அவர்களின் விழிகளை விரியவைத்தது. சா.க. எப்போதும் இப்படித்தான். சொல்ல வேண்டியதைப் பளிச்செனச் சொல்வதோடு, படிப்பவரும் கேட்பவரும் தாமாகக் கற்பனைசெய்து