லீலாவதி ஆவேன்
கதை
லீலாவதி ஆவேன்
எஸ். ராமகிருஷ்ணன்
சத்யநாராயணனிடமிருந்து மெயில் வந்திருந்தது.
விடுமுறை குறித்துச் சத்யா முன்னதாகவே சொல்லியிருந்தான். ஆனால் இப்படியொரு காரணத்தை எதிர்பார்க்கவில்லை.
ரோட்ரிச், மெயிலை இரண்டாவது தடவையாகப் படித்தான். சத்யாவிற்கு இப்படியொரு மறுபக்கம் இருப்பது ஆச்சரியப்படுத்தியது.
சீவெல் சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ரோட்ரிச் ஏற்று ஆறுமாதமே ஆகியிருந்தது. இந்த ஆறு மாதங்களுக்குள் சத்யாவும் அவனும் மிகவும் நெருக்கமாகியிருந்தார்கள்.
இருவரும் வார இறுதி நாட்களில் ஒன்றாக பாருக்குப் போவதும், டென்னிஸ் ஆடுவதும் வழக்கமாகயிருந்தது. பெரும்பான்மையாக அவர்களின் உரைய