பொருநை பக்கங்கள்
சிறப்புப் பகுதி
பொருநை பக்கங்கள்
தி.ஜா 100
இலக்கியப்பணி என்று எதைச் சொல்லுவது? என் ஆத்ம எதிரொலிப்பாக, நான் வாழும் வாழ்க்கையின் ரஸனையை எனக்கு எளிதாகக் கைவரும் எழுத்தின் மூலம் வெளிக்காட்டுகிறேன். இதில் சேவை என்பதோ பணி என்பதோ இடமே பெறவில்லை. என்னுடைய இன்பங்களை, நான் துய்க்கும் சோக உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவே நான் விரும்புகிறேன். சுற்றிலும் உலகம் சிறியதும் பெரியதுமாகச் சாதாரண அசைவுகளில்கூட வியப்புகள் நிறைந்து இயங்குகிறது. அதைப் பார்த்துக்கொண்டிருப்பதே ஆனந்தம்தான். அதைத்தான் நான் பகிர்ந்துகொள்கிறேன், எழுத்து மூலம்.
தீபம் நேர்காணல் (அக்.1966)
மகத்தான படைப்புகளை எளிமையாகவும் சுருக்கமாகவும் அறிமுகப்படுத்துவதே இந்தச் சிறப்புப் பகுதியின் நோக்கம். இலக்கிய ஆர்வலர்களான நண்பர்கள் சிலரின் முயற்சி ‘பொருநை’. காலாண்டுக்கொருமுறை செவ்விலக்கியத்தை முன்வைப்பது ‘பொருநை’யின் விருப்பம். நூற்றாண்டு காணும் முன்னோடி தி. ஜானகிராமன் படைப்புகளின் எளிய அறிமுகம் இவ்விதழில்...
தேர்வும் ஒருங்கிணைப்பும்: சுகுமாரன்
ஓவியம்: ரோஹிணி மணி