நார் இல் மாலை
கட்டுரை
நார் இல் மாலை
இசை
Ajacharya 2015
Courtesy: Mojarto.com
அ. முத்துலிங்கம் தன் சமீபத்திய உரையாடலில் இதுபோலச் சொன்னார், “சங்க இலக்கியங்கள படிச்சாலே போதும்... எதுக்கு மத்த இலக்கியத்தெல்லாம் படிச்சுட்டு என்று சிலசமயம் தோன்றும்...” எனக்கும் சில சங்கப்பாடல்களை வாசிக்கையில் அப்படி தோன்றியதுண்டு. அகப்பாடல்களின் முதற்பொருள் நிலமும் பொழுதும். அவை நிலத்தையும் பொழுதையும் விரித்துப் பேசியவை. தொல்காப்பியம் வகுத்துச் சொல்லும் ஐவகை நிலங்களை நாம் அறிவோம். பொழுதுகளில் பெரும்பொழுது, சிறுபொழுது என இரண்டுண்டு. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் போன்ற பருவங்கள் பெரு