யானையின் சம்பளம்
கதை
யானையின் சம்பளம்
அ. முத்துலிங்கம்
ஓவியம்: பி.ஆர். ராஜன்
வேறு வழியில்லை. யானையைக் கொண்டு வரவேண்டும் என்று சொன்னது லலித் ஜெயவர்த்தனாதான். எப்படி? “நான் கொண்டுவருகிறேன். இதுகூடச் செய்ய முடியாதா?” என்றான். எல்லாப் பிரச்சினைகளுக்கும் அவனிடம் தீர்வு இருந்தது. அநேக சமயங்களில் பிரச்சினையை உண்டாக்குவதும் அவனாகவே இருக்கும்.
லாம்ரெட்டா கம்பனி ஆரம்பித்தபோது இளம்வயது பயிற்சியர் தேவைப்பட்டார்கள். கடைநிலை வேலை; சம்பளம் குறைவு. இருநூறுபேருக்கு மேலே நேர்காணலுக்கு வந்