மதுரைப்பிள்ளை
கட்டுரை
மதுரைப்பிள்ளை
(வள்ளல்நிலைமுதல் வறியநிலைவரை)
ஸ்டாலின் ராஜாங்கம்
அயோத்திதாசர் ஓரிடத்தில் “தற்காலம் தமிழ் வளர்க்கும் தாதாக்கள் இருவர்” என்றும் மற்றோரிடத்தில் “தற்காலமுள்ளத் தமிழ்மண மாறாது தென்னிந்தியாவில் வீசச்செய்து வரும் மன்னர்கள்” (ப.546, II) என்றும் குறிப்பிட்டு பாண்டித்துரைத்தேவர், பெ.மா. மதுரைப் பிள்ளை ஆகிய இருவரையும் கூறுகிறார். இதில் பாண்டித்துரைத்தேவர் மதுரையில் 1901ஆம் ஆண்டு நான்காம் தமிழ்ச்சங்கம் அமைத்தவர். தமிழ் இலக்கண- இலக்கியங்களைப் பதிப்பிக்கும் நோக்கத்தில் அச்சகம் நிறுவியவர். தொடர்ந்து 1903ஆம்