கவிதை: எழில்
கவிதை
எழில்
மாந்தளிர்கள் கன்றிப்போம் வேனிற்கால
வானத்தே மாசில்லா மாலைப்போதில்
சாந்தத்தில் உலகெல்லாம் ஏதோ நோக்கி
சந்தடிகள் நிறுத்தியபோல், பறவைப்பாட்டும்
ஓய்ந்தமைதி கொள்ளுங்கால் மேல்வான் தன்னில்
ஒளி உருவம் பிறைப்பிள்ளை முளைக்கும் காலை
காந்தத்தில் லயித்ததனின் எழிலைக்கண்டு
கருத்திழந்து மோனத்தில் கலந்தோம் அன்றோ?
வானத்து மீனுண்டு, மதியும் உண்டு
வன்னங்கள் பல காட்டும் மலர்கள் உண்டு
கானத்தில் நாள்போக்கி மனம்போல் வாழும்
காவ