இலங்கை – P2P உள்முரண்பாடுகளின் காலக் கண்ணாடி
கட்டுரை
இலங்கை – P2P
உள்முரண்பாடுகளின் காலக் கண்ணாடி
எம். பௌசர்
கடந்த பிப்ரவரி மூன்றாம் தேதி தொடக்கம் ஏழாம் தேதிவரை கிட்டத்தட்ட முன்னூறு மைல்கள் தாண்டிய ஒரு மக்கள் வெகுஜனப் போராட்டம் , இலங்கையின் வடக்கு கிழக்குப் பிராந்தியத்தில் நான்கு தினங்கள் தொடர்ச்சியாக நடந்து முடிந்தது. இந்தப் போராட்டம் பல்வேறு தரப்புகளாலும் ஊன்றிக் கவனிக்கப்பட்டது. இலங்கை அரசு, சர்வதேசச் சமூகம், சர்வதேச நாடுகள் உட்பட , உலகளவில் பரந்து வாழும் தமிழ் மக்களும் இதில் உள்ளடங்குவர்.
2009 இல் இலங்கை அரசுக்கும் விடுதல