இரு ஸ்வர்ணகுமாரிகள்
கட்டுரை
இரு ஸ்வர்ணகுமாரிகள்
பாரதியின் ‘ஸ்வர்ணகுமாரி’ புதிய வடிவம்
ய. மணிகண்டன்
பாரதிக்கு மிகவும் பிடித்த பெயர்களுள் ஒன்று ஸ்வர்ணகுமாரி. தன் மூத்த மகள் தங்கம்மாவைத் ‘தங்கச்சிங்’, ‘சந்திரிகை’, ‘ஸ்வர்ணகுமாரி’ என்ற பெயர்களால் அவர் அழைத்து மகிழ்வாராம். தனக்குப் பிடித்த ‘ஸ்வர்ணகுமாரி’ என்னும் தலைப்பிலேயே அவர் ஒரு சிறுகதையை எழுதியிருக்கின்றார்.காசியிலே அத்தை வீட்டில் பாரதி வசித்துவிட்டு வந்தது போலவே அவருடைய மூத்த மகள் தங்கம்மாவும் காசியிலே அத்தைவீட்ட