ஏப்ரல் 2021
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஏப்ரல் 2021
    • 2021 புத்தகக் காட்சி
      எதிர்பார்ப்பைக் கடந்து...
      சில பரிந்துரைகள்
      தடையை மீறிய சாதனை
      புத்தகங்கள் தற்கொலைக்குத் தூண்ட வேண்டும்
      நூல் நாடி, நூலின் முதல் நாடி...
      இங்கு இருப்பதே கலை
    • பாரதியியல்
      பாரதியும் ‘பார்க்கப்படாதாரும்’
    • 2021 தேர்தல்
      இலவச வாக்குறுதிகளும் கூட்டணி விசித்திரங்களும்!
      ஆட்சி அதிகாரப் போட்டி
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • சிறப்புப் பகுதி: பொருநை பக்கங்கள்
      ‘இப்ப சரியாயிருச்சா?’
      நான் என்ன படிக்கிறேன், ஏன்?
      பாடகி
      மொழிபெயர்ப்பது எப்படி?
      சிட்டுக்குருவி
      ‘மனசுக்குப் பிடித்ததை எழுதுங்கள்’
    • கவிதை
      கவிதை
    • கவிதைகள்
      மொழிபெயர்ப்புக் கவிதைகள்
    • அஞ்சலி: இரா. கிருஷ்ணமூர்த்தி (1933 - 2021)
      நாணயங்களை வரலாறு ஆக்கியவர்
      இதழாசிரியர் பணியும் வளர்ச்சி செய்தியும்
    • கட்டுரை
      நிழல் போர்
    • கதை
      திராட்சை மணம் கொண்ட பூனை
    • தலையங்கம்
      அரசதிகாரத்தின் அங்கமாகும் எதிர்ப்பரசியல்
    • கொரோனா உற்றதும் உணர்ந்ததும்
      நாம்தான் மாற வேண்டும்
      புதிய உலகின் விசித்திரங்கள்
      90 வயதினிலே
      ஒன்றோடு நில்லாது
      சிரிப்பு வருகிறது; பயமாகவும் இருக்கிறது
      மதிப்பு உயர்ந்தது
      எனக்காக, சலபதிக்காகவும்
    • அஞ்சலி: வெ. ஜீவானந்தம் (1945 - 2021)
      முரண்களை இயைத்தல்
      தனித்துவத்தின் பேரொளி
      தகைசால் பண்பாளர்
      அகிம்சைப் போராளி
      இதயத்தின் வழி சமூகத்தோடு உரையாடியவர்
    • அஞ்சலி: இராம. சுந்தரம் (1938 - 2021)
      அறிவியல் தமிழறிஞர்
    • Sign In
    • Register
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 50
  • ஆண்டுச் சந்தா ரூ. 425
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500
  • காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஏப்ரல் 2021 2021 புத்தகக் காட்சி எதிர்பார்ப்பைக் கடந்து...

எதிர்பார்ப்பைக் கடந்து...

2021 புத்தகக் காட்சி
அனுஷ்

அனுஷ், பதிப்பாளர், எதிர் வெளியீடு

எதிர்பார்ப்பைக் கடந்து...

உலககெங்கிலும் உள்ள ‘பதிப்பாளர்களின் மெக்கா’ என்று பிராங்க்பர்ட் புத்தகச் சந்தையைக் கூறுவதுண்டு. தமிழகப் பதிப்பாளர்களின் மெக்கா என்றால் அது சென்னை புத்தகக் கண்காட்சிதான்.

கொரோனா பெருந்தொற்று முடக்கத்தால் 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சென்னை புத்தகக் காட்சிக்குப் பிறகு அந்த ஆண்டு முழுவதும் எந்தவொரு பெரிய புத்தகக் காட்சியும் தமிழகத்தில் நடைபெறவில்லை. தமிழகப் பதிப்புத்துறையைப் பொறுத்தமட்டில் பதிப்பகங்களின் மொத்த வருமானத்தில் ஆண்டு முழுவதும் நடைபெறும் புத்தகக் காட்சிகள் கணிசமான பங்கு வகிக்கின்றன. நாற்பது முதல் ஐம்பது சதவிகித விற்பனை இந்தப் புத்தகக் கண்காட்சிகளை ஒட்டியே நடைபெறுகிறது. அதுவும் இத்தகைய நிகழ்வுகளில் மிகப்பெரியதும் உலகம் முழுமையும் உள்ள தமிழர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒன்றாகவும் மாறியுள்ளது சென்னை புத்தகக் கண்காட்சி.

ஓராண்டாகத் தொடர்ந்த தேக்கத்துடன் புதிய புத்தகங்கள் பதிப்பிக்காமலும் கடந்த நிலையில், 2021 பிப்ரவரி மாதம் இறுதியில் சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்ற அறிவிப்பு பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தினை ஏற்படுத்தியது. சோம்பலை முறித்துப் புதிய வெளியீடுகளைப் பதிப்பிக்கத் திட்டமிடத் தொடங்கினர். மிகக்குறுகிய காலமே எஞ்சியிருந்ததால் தாங்கள் கொண்டுவர நினைத்த புத்தகப் பணியினை முடுக்கிவிட்டனர்.

பெருந்தொற்றுக் கால அரசின் பொதுமுடக்க விதிமுறைகளுக்கு உட்பட்டுப் புத்தகக் காட்சி நடைபெறும் என பபாசி அறிவித்தது. ஓர் அரங்கிற்கு நான்குபேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். முகக்கவசம் கட்டாயம். சானிடைசர்களைப் பயன்படுத்திய பிறகே வாசகர்கள் அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவர் போன்ற அறிவிப்புகள் பிரதானமாக இருந்தன. வாசகர்களுக்கான அனுமதி நேரம்கூட இரவு எட்டுமணிவரை எனச் சுருக்கப்பட்டது.

கோவிட் காலத்தில் இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்தான் என்றாலும் இவை விற்பனையில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கணிக்க முடியாமல் இருந்தது. எனவே சென்ற ஆண்டுடன் ஒப்பிட்டு ஐம்பது சதவீத விற்பனையை எதிர்பார்த்துதான் அரங்கமைத்தோம்.

ஆனால் நிச்சயமாக நாங்கள் எண்ணியதைவிட பெருந்திரளாக வாசகர்களின் வருகை இருந்தது; மட்டுமில்லாமல் விற்பனையிலும் அது எதிரொலித்தது. இதற்குக் காரணமாக நான் பார்ப்பது சென்னை புத்தகக் கண்காட்சியானது சென்னையின் பண்பாட்டு அடையாளமாக மாறியுள்ளது. வாசகர்களுடன் ஒரு பெரும் பிணைப்பை அது ஏற்படுத்திக்கொண்டுள்ளது. இக்கண்காட்சியை ஒட்டிப் பதிப்பகங்கள் வெளியிடும் புதிய புத்தகங்களை அறிந்துகொள்ளவும் வாங்கவும் வாசகர்கள் பெரும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

பதிப்பாளர்களுக்கும் மற்ற நகரங்களில் நடைபெறும் புத்தகக் காட்சிபோல் இல்லாமல் வேறுபல அனுகூலங்களையும் வழங்குகிறது. எழுத்தாளர்கள் சந்திப்பு, அரங்கிற்குள்ளேயே நடைபெறும் புத்தக வெளியீடுகள், வாசகர்களின் நேரடி வருகை என ஒரு கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்துகிறது.

இந்தப் புத்தகக் காட்சியின் மிகப்பெரிய அனுகூலத்தில் ஒன்று பணச்சுழற்சிக் காலதாமதமின்றி நேரடியாகப் பதிப்பாளருக்குக் கிடைப்பது. இது பலவகையிலும் அவர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியது. மேலும் ஊடகங்கள் தொடர்ந்து கொடுக்கும் முக்கியத்துவம், அவை காட்சி ஊடகங்களானாலும் அச்சு ஊடகங்களானாலும் ஒன்றை நீங்கள் கவனித்திருக்கக் கூடும். கண்காட்சி நடக்கும் நாட்களில் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து புத்தகத்துடன் இருப்பது போன்றோ புத்தக வெளியீடு நிகழ்வோ புகைப்படங்களோ பகிரப்பட்டு வந்திருக்கும். இவை கண்காட்சியைத் தொடர்ந்து ஊடக வெளிச்சத்தில் வைத்திருக்க உதவக்கூடியவை. மற்ற புத்தகக் கண்காட்சிகளில் காணக்கிடைக்காத ஒரு கொண்டாட்ட நிலையை இங்கே நீங்கள் தரிசிக்கலாம். இவை அனைத்தும் சூழலைப் புத்துணர்ச்சியுடன் இயங்க அனுமதிக்கும்.

இந்த சென்னை புத்தகக் காட்சிக்காக ‘எதிர் வெளியீடு’ இருபது புதிய நூல்களைப் பதிப்பித்தது. அரசியல், வரலாறு, தத்துவம், புனைவு, கட்டுரை, கவிதை எனப் பல்வேறு தலைப்புகளில் இவை அமைந்திருந்தன. வழக்கம் போலவே வாசகர்களின் அமோக வரவேற்பு இந்தப் புதிய நூல்களுக்குக் கிடைத்தது. பெரும்பாலான புதிய புத்தகங்களின் வெளியீட்டையும் அறிமுகங்களையும் எதிர் வெளியீடு அரங்கிலேயே நடத்தினோம். நிறைவான நிகழ்வுகளாக அவை நடந்து முடிந்தன. 

மாறிவரும் உலகப் பதிப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு மாற்றங்களுக்குத் தயாராக வேண்டியிருப்பதும் நமது கடமையாகும். அச்சுப் புத்தகங்கள் மட்டுமே அல்லாமல் பல்வேறு வடிவங்களைப் புத்தகங்கள் எடுத்துவிட்டன. மின் புத்தகம், ஒலிப் புத்தகம் என வருங்காலத்தில் கோலோச்சும் வடிவங்களாக இவற்றை ஏற்றுக்கொள்வதா என்ற குழப்பம் நிறைய பதிப்பாளர்களிடம் இன்னமும் இருக்கிறது. எழுநூறு அரங்கங்களும் அச்சுப் புத்தகத்திற்கான இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ள நிலையில் ஒன்றிரண்டு ஒலி, மின் புத்தகங்களுக்கான அரங்கினையும் காண முடிந்தது.

சென்னை புத்தகக் காட்சிக்கே உரிய பல நிறைகள் இருந்தாலும் குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. பல வருடங்களாக ஒரே மாதிரியான அரங்க வடிவமைப்புகள் வாசகர்கள் மத்தியில் பெரும் சலிப்பை உண்டாக்குபவை. தில்லி, கேரளா, மேற்கு வங்கம் போன்ற இடங்களில் நடைபெறும் புத்தகக் காட்சிகளை மாதிரியாகக் கொண்டு வருங்காலங்களில் இவற்றைச் சரிசெய்யலாம். எழுநூறு அரங்கங்களை ஒரே கூரையின் கீழ் ஒதுக்காமல் துறைவாரியாக அவற்றைப் பிரிக்கலாம். குழந்தைகள் நூல்கள், துறைசார்ந்த நூல்கள், ஆங்கில நூல்கள் என எத்தனை சாத்தியங்கள் உள்ளனவோ அத்தனையையும் முயற்சி செய்யலாம். இவற்றைச் செயல்படுத்தும்போது வாசகர்களுக்கு நேரமும் நூலைத் தேர்ந்தெடுக்க கொடுக்கும் உழைப்பும் மிச்சமாகும். போதிய காற்றோட்ட வசதிகள் செய்துதரப்பட வேண்டும். இவை வாசகர்கள் கூடுதல் நேரத்தை அரங்கினுள் செலவிட உதவிபுரியும். எழுத்தாளர்கள், வாசகர்கள் சந்திப்பு நிகழ்வுகளைத் திட்டமிடலாம். வாசகர்கள் தங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்களின் புத்தகத்தைக் கையொப்பத்துடன் வாங்குவது அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது போன்றவற்றைச் செயல்படுத்த பபாசி பரிசீலிக்கலாம்.

ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கவுள்ள நன்கொடை சென்னை புத்தகக் காட்சிக்குக் கிடைத்துள்ளது உண்மையில் மிக மகிழ்ச்சிகரமான செய்தி. இன்னும் அரசாங்கத்திடம் இருந்து என்ன வகையான உதவிகளைப் பெற்று உள்ளதைவிட மேம்பட்டதொரு கண்காட்சியாக நடத்திட முடியும் என பபாசி திட்டமிடவேண்டும். அரசு நூலகங்களுக்கு நூல்களைக் கொள்முதல் படுத்துவதில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும். நூலகங்களும் புத்தகக் காட்சிகளும்தான் நூல்களை மக்களிடையே கொண்டுசேர்க்கும் முதன்மையான நிறுவனங்கள். அதுபோலவே சென்னை மட்டுமல்லாமல் மாநிலத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இதுபோன்ற புத்தகக் காட்சிகளை நடத்த உறுதியான நடவடிக்கைகளை பபாசி எடுக்க வேண்டும் என்பதே அனைத்துப் பதிப்பாளர்களின் வேண்டுகோள். 

மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com

 

1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.