Mr. K
கதை
இளங்கோ
Mr. K
கோடைகாலத்தின் தொடக்கமாக அப்போது இருந்திருக்க வேண்டும். நிலம் முழுதும் பசுமை விரிந்துகிடந்தது. சணல் வயல்கள் மஞ்சள் நதிகளைப்போல இடையிடையே நெளிந்தோடின. வெயிலும் இடைக்கிடை மழையுமென வாழ்வதற்கு இதைவிட வேறென்ன வேண்டுமென நினைக்க வைக்குமளவுக்குக் காலநிலை மனத்துக்கு உவப்பானதாக இருந்தது. நான் எனது பல்கலைக்கழகத்தை முடித்துவிட்டு ரொறொண்டோவுக்குத் திரும்பியிருந்தேன். பனிக்காலம் முழுதும் படித்த படிப்புக்கேற்ப ஒரு வேலை தேடிக் கிடைக்காததில் சோர்ந்திருந்தேன். இளவேனில் முடிந்து பசுமையாய் கோடை விரிய வேலையொன்றுக்கு அழைப்பு வந்திர