காற்றில் மறைந்த குரல்
[அஞ்சலி ] பெ.சு. மணி (02.-11.1933 - 27.04.2021)
காற்றில் மறைந்த குரல்
தி. பரமேசுவரி
திருவண்ணாமலை அருகிலுள்ள பென்னாத்தூரைப் பூர்வீகமாக கொண்ட, சுந்தரேசன் - சேதுலட்சுமியின் மகன் பெ.சு. மணி தன் 87ஆம் வயதில் உடல்நலக்குறைவு காரணமாக தில்லியில் அன்று மறைந்தார். பெ.சு. மணி என்றாலே உயரமாக, கணீரென்ற குரலுடன் கதர் வேட்டி, கதர் ஜிப்பா அணிந்து மிதிவண்டியில் வந்து ம.பொ.சியுடன் உரையாடும் அன்பர் என்றொரு சித்திரத்தை வேகமாய்த் தீட்டுகிறது மனம். இளம்பருவத்தில் இருவருக்குமான உரையாடலைக் கவனிப்பவளாக இருந்திருக்கிறேன். பின், ம.பொ.சியும் பாரதியும் என்ற என் முனைவர் பட்ட ஆய்விற்காக அவரிடம் பேசத் தொடங்கி