தெளிவித்த மறைநிலம்
[அஞ்சலி]
தெளிவித்த மறைநிலம்
ந. ஜயபாஸ்கரன்
1980களின் பிற்பகுதியில் பெ.சு. மணியின் ‘கார்ல் மார்க்சின் இலக்கிய இதயம்’ என்ற புத்தகத்தைத் தலைப்பின் தாக்கத்தால் வாங்கிப் படித்தபோது, அது அந்த நூலில் அடங்கியிருந்த பல கட்டுரைகளில் ஒன்றின் தலைப்புதான் என்று தெரியவந்தது. ஏமாற்றப்பட்ட உணர்ச்சி சிறிது எழுந்தாலும், புத்தகத்தை முழுதும் வாசித்தபோது அயோத்திதாச பண்டிதர், தோழர் சிங்காரவேலர், சேலம் பகடால நரசிம்மலு நாயுடு, காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா முதலிய ஆளுமைகளுடன் அது செய்துவைத்த அறிமுகம் மறக்க முடியாததாக இருந்தது. ‘கார்ல் மார்க்சின் இதயம்’ கட்டுரையும் மார்க்சின் இலக்கிய ருசி பற்றிய பல தகவல