ஒன்றெனக் கலத்தல்
[கதை]
ஒன்றெனக் கலத்தல்
கமலதேவி
ஓவியம்: செல்வம்
குருவாயி கோவிலின் முன்னால் கிளைபிரிந்த அய்யாற்றில் தண்ணீர் சுழித்துக்கொண்டு பாய்ந்தது. ஆற்றின் சீறல் ஓசை தொலைவுவரை கேட்டது. எங்கும் புங்கைகள் கிளைநீட்டித் தடித்து வளர்ந்திருந்தன. மழை கழுவிய கரும்பச்சை இலைகள் சூரிய ஔியில் மினுமினுத்து அசைந்தன.
ஆற்றின் அக்கரையில் சிவப்பு நிறத்துணி அசையும் மங்கலாய் குருவாயி தெரிகிறாள். இக்கரையில் புளியம், மா, பலா பெருமரங்கள் நின்ற அடிவாரப்பகுதியை அடுத்து அய்யாற்றின் அடுத்த கிளை. அதையடுத்த காட்டிலிருந்து கொல்லிமலை ஏற்றம்.
<