தேடலில் பிறந்த அர்ப்பணம்
தேடலில் பிறந்த அர்ப்பணம்
வே. வசந்திதேவி
மைதிலி சிவராமன் (1939 – 2021)
சென்னை மாநிலக் கல்லூரி; 1956ஆம் ஆண்டு; மேல் தளத்தில் இருக்கும் மாணவியரின் அறை; உள்ளிருக்கும் தேவிகளின் தரிசனத்திற்காக எந்நேரமும் வராந்தாவில் அலைந்துகொண்டிருக்கும் மாணவரின் கண்களில் படாமல் இருப்பதற்காக எப்பொழுதும் மூடப்பட்டிருக்கும் அறையின் கதவுகளைத் தள்ளித்திறந்துகொண்டு, கொடிபோன்ற பதினேழு வயதுப் பெண் நுழைகிறாள். கண்களில் ஒரு பதற்றம்; பிறக்காத கேள்விக்கு விடை தேடும் சஞ்சலம். இப்பொழுதே விடை வேண்டும் என்ற அவசரம். அனைத்தையும் மீறிய ஏதோ ஒரு தீர்க்கம். அறை முழுது