எஸ்.என். நாகராஜன் (1927 - 2021)
எஸ்.என். நாகராஜன் (1927 - 2021)
காலச்சுவடு இதழ் 10இல் (ஜனவரி - மார்ச் 1995) வெளிவந்த எஸ்.என். நாகராஜனின் நேர்காணலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கேள்வி - பதில்கள் அவர் நினைவாக மீள்பிரசுரம் செய்யப்படுகின்றன.
தகுதியிருந்தா யார வேணா ஆச்சாரியனா வச்சுக்கறதுக்கு ஒரு மரபு இருந்ததுங்கிறீங்க இல்லையா, அது என்ன மரபு?
தென்கலை வைணவ மரபுதான். அதாவது வைணவத்துக்குள்ளதான் இந்த மரபு இருக்கு. பிந்திய காலகட்டத்துல ராமானுஜருக்கு ஒரு முன்னூறு ஆண்டுகளுக்குப் பின் இரண்டா பிரியுது. ஒண்ணு வடகலை. ஒண்ணு தென்கலை. இந்த வடகலை மரபு என்ன பண்ணறான்னு கேட்டா யாரு வேணா வைணவன் ஆகலாமே தவிர ஆச்சாரியனா வரணங்கறவன் அவன் பிராமணனாகத்தான் இருக்கணும். கீழ்ச்சாதிக்காரனும் மத்தவங்களும் ஆச்சாரியனா வரத ஒத்துக்க முடிய