வவ்வால்கள்
வவ்வால்கள்
நொயல் நடேசன்
ஓவியம்: றஷ்மி
நம் மனம் புனிதமற்றது என்பது மட்டும் உண்மை; குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கலாம்.
கொலை, பாலியல் வன்முறைகள், வஞ்சனைகள், திருட்டுகள் எனப் பல குற்றச்செயல்கள் கணத்துக்குக் கணம் முளைவிடும் அநியாய பூமி எமது மனவெளியே. அங்குதான் புவியில் நடக்கும் அநியாயங்களின் விதைகள் முளைப்பதற்கான தருணம் பார்த்துக் காத்திருக்கின்றன. மனத்தில் குமிழ்விட்டு உடையும் அழுக்கான எண்ணங்களுக்கு மதம், நாகரிகம், கலாச்சாரம், சட்டமெல்லாம் உறைபோடமுடியாது.
மனத்தில் ஏற்படும் எண்ணங்களை மறைக்க நாம் நினைத்த