இனியாவது விதி செய்வோம்
இனியாவது விதி செய்வோம்
தி. பரமேசுவரி
வாழ்க்கையை முன்கூட்டி மதிப்பிட உதவும் கலை என்று கல்வியைச் சொல்லலாம். மதிப்பிடல் மூலம் வாழ்க்கையை எதிர்கொள்வதும் மாறிவரும் வாழ்க்கையைப் புரிந்துகொண்டு நம் சமன்நிலையைக் காப்பாற்றிக்கொள்வதும் சாத்தியமாகிறது. ஆனால் இன்றைய கல்வி மூலம் நம் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடிகிறதா?
-சுந்தர ராமசாமி (சுய கல்வியைத் தேடி)
கல்வி பற்றிய எந்தப் புரிதலுமற்ற மனிதர்கள் கூடி, கற்பதற்கான நூல்களை, கல்விச் சட்டகத்தை உருவாக்குகிறார்கள். எந்தப் புரிதலுமற்ற ஆசிரியர்கள் கற்பிக்க, புரிதலின்றியே மாணவர்கள் கற்பதாகப் பாவிக்கிறார்கள். இத்தக