சீர்திருத்தங்கள் தேவை
சீர்திருத்தங்கள் தேவை
கீதா நாராயணன்
(வளர்ச்சி, ஆலோசகர், ஆய்வாளர், செயற்பாட்டாளர்)
பாலியல் வன்முறைகள், அத்துமீறல்கள் குடும்பம், கல்வி நிறுவனங்கள், பணித்தளங்கள் என அனைத்து நிறுவனங்களிலும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன.
இப்போது வெளிவந்திருக்கும் பள்ளிகளில் நடந்த குற்றங்கள்பற்றிக் காவல்துறை விசாரணை மூலமே முழுமையாக அறிந்துகொள்ள முடியும்.
இந்தக் கல்விமுறை கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்களைப் பிள்ளைகளுக்கும் கற்றுத் தரவில்லை; ஆசிரியர்களுக்கும் கற்றுத்தரவில்லை. பிஎஸ்பிபி, சுஷில்ஹரி பள்ளிகளில் கல்விகற்ற பழைய மாணவிகள் தங்கள் பள்ளிக்காலத்தைக் கடந்த பின்னரே புகார்களைச் சொல்லியிருக்கிறார்கள். மாண