தேர்வுகள் சோதனைகள்
தேர்வுகள் சோதனைகள்
ஜே.ஆர்.வி. எட்வர்ட்
சென்ற ஆண்டு (2020) மார்ச் இறுதியில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டில் மேல்நிலை இரண்டாமாண்டு மாணவர்களின் தேர்வுகள் முடிந்திருந்தன, ஒருநாள் தேர்வைத் தவிர. அது பிற்பாடு சில குழப்பங்களுக்கிடையில், ஓரிரு ஒத்திவைப்புகளுக்குப் பின்னரும் சுமூகச்சூழல் கனியாததால் ரத்து செய்யப்பட்டது. பள்ளி இதர வகுப்பு மாணவர்களின் ஆண்டிறுதித் தேர்வுகள் நடத்தப்படவில்லை. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சிபெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்டது. அம்மாணவர்கள் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ஒவ்வொரு பாடத்திலும