இரண்டாவது படுகொலை
இரண்டாவது படுகொலை
1979இல் நான் முதல்முறையாக அலகாபாத்திற்குச் சென்றேன். பின்வந்த பத்தாண்டுகளில் எனது பணிக்காகவும் தனிப்பட்ட முறையிலும் அங்கே அடிக்கடி போய்வந்தேன். காந்திமீதான ஆய்வைத் தொடங்கிய பின்னர் அந்த நகரத்தோடான என் பிணைப்பு மேலும் ஆழப்பட்டது. 2002ஆம் ஆண்டு வேனிற்காலத்தில், அந்த ஆண்டு நடந்த கொடூரக் கலவரச் சம்பவங்களுக்குப் பிறகு முதல்முறையாக அங்குசென்ற எனக்குச் சபர்மதி ஆசிரமத்திற்குப் போக வேண்டும் என்று இயல்பாகத் தோன்றியது. அங்கு அதன் பொறுப்பாளர்களில் ஒருவரிடம் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். சுயமுனைப்பற்ற, அமைதியான அந்த மனிதர் காந்தியப் பணிகளில் முப்பது ஆண்டுகள் செலவழித்தவர். பேச்சினிடையில் 2002இல் நடந்த குஜராத் கலவரம் பற்றிப் பேச்சுவந்தபோது அவர் அதை ‘காந்தி இரண்டாவது முறையாக படுகொலை செய்யப்பட்டார்’ என்று குற