வி.மு. சுப்பிரமணியம் உ.வே.சா.வின் மாணவர்
வி.மு. சுப்பிரமணியம்
உ.வே.சா.வின் மாணவர்
நூற்று எண்பத்து நான்கு ஆண்டுக்காலத் தொன்மைச்சிறப்பும் வரலாற்றுப்பெருமையும் கொண்டது சென்னைகிறித்தவக் கல்லூரி. அதன் மொழித்துறையின் ஓர் அங்கமாக விளங்கி 1969இல் தனித்துறையாக விகசித்த தமிழ்த்துறை 2019 -2020இல் பொன்விழாவைக் கொண்டாடியது. தமிழின் இருபெரும் ஆளுமைகளான பரிதிமாற்கலைஞரும் மறைமலையடிகளும் பணியாற்றிய துறை என்கிற பெருமிதம் ஒருபக்கம் இருந்தாலும் அந்த இருவரின் பெருவெளிச்சத்தில் துறையில் பணியாற்றிய மற்றைய பேராசிரியர்களின் பணிகள் கவனப்படுத்தப்படவில்லையோ என்ற ஆதங்கம் இன்றைய துறைப் பேராசிரியர்களிடம் மட்டுமல்ல தமிழார்வம் கொண்ட பலரிடமும் வெளிப்பட்டது. ஈக்காடு ரத்தினவேல் முதலி