இதுவோ பக்தி?
கவிதை
இதுவோ பக்தி?
ஒருநாள் காலை ஒன்பது மணிக்கு
வருகிறேன், செனைபூக் கடைவழி நடந்து,
அருகிலோர் மெலிந்தஆள் ரத்த வேர்வை
பெருகிவ ழிந்திடப் பிடித்தொரு ‘ரிக் ஷா’
வண்டியை யிழுத்து வந்திடப் பார்த்தேன்.
கொண்டே நின்றான், கந்தர்கோ யில்முன்,
வெள்ளைவி பூதிதூள் மேனியிற் றுலங்கிட
உள்ளிருந் திறங்கினான், உடல்பருத் திட்டஆள்,
வாட்டமும் சோகமாய் வண்டிகா ரன்கரம்
நீட்டிக் கூலிப்பெற நின்றனன், பணிவுடன்,
கொடுத்த தோர் கூலியில் குறைந்தது, ஓரணா,
அடுத்துமே கேட்டனன், அவ்வண்டி காரனும்,
‘போட்டுக்கொ டுத்திடும் போகணும் தூர நான்;
மாட்டைப்போ லிழுத்தேனே மனங்கல்லோ உனக்கய்யா’
என்றதும், எதி