செய்யுள் என்னும் மரபும் கவிதை என்னும் நவீனமும்
கட்டுரை
செய்யுள் என்னும் மரபும்
கவிதை என்னும் நவீனமும்
1897ஆம் ஆண்டு பிறந்த முருகேச பாகவதரின் கவிப்புலமை 1918வாக்கில் வெளியே தெரிய வந்தது என்கிறார் பேராசிரியர் க. ஜெயபாலன். மரபான கல்விமுறை முடிந்து நவீன கல்விமுறை நிலைபேறு அடைந்துவிட்ட காலத்தில் முருகேசரின் பால்ய படிப்பு தொடங்கியிருக்கிறது. சென்னை வில்லிவாக்கம் கொன்னூரில் பிறந்த முருகேசர் அங்கேயே லுத்தரன் திருச்சபையின் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். எனினும் தனியே மரபான தமிழ்க்கல்வியைப் பெற்றிருக்கிறார். அக்காலச் சென்னையில் ஒடுக்கப்பட்டோரிடையே கவிவாணர்களும் அவதானிகளும் நிறைந்திருந்தனர். மரபான தமிழ்க்கல்வியோடு தொடர்புகொண்டிருந்த அவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் சென்னையில் கால்கொண்ட நவீன தலித் அரசியலைக் கட்டியெழுப்புவதிலும் ஈடுபாடுகொண்டிருந்தனர். மரபான சொல்லல்முறையையும் நவீனகால மாற்றங்களையும் உள்ளடக்கி வெளியான தலித் இதழ்