தாலிபான்கள் இருளும் ஒளியும் புகைமூட்டமும்
தாலிபான்கள்
இருளும் ஒளியும் புகைமூட்டமும்
ஆகஸ்ட் 31ஆம்தேதி ஆப்கனை ஆக்கிரமித்திருந்த தனது கடைசிப் படைவீரரையும் விலக்கிக்கொள்ள முடிவெடுத்திருந்தது அமெரிக்கா. தாலிபான்களோடு மல்லுக்கட்ட முடியவில்லை; தோல்வியடைந்த முகத்தோடு நாடு திரும்ப முடியவில்லை. எந்தக் குழுவினரை அதுவரைக்கும் பயங்கரவாதிகள் என்று அமெரிக்கா சொல்லிக்கொண்டிருந்ததோ, அதே பயங்கரவாதிகளுடன்தான் அது பேச்சுவார்த்தை நடத்தியது - கத்தார் நாட்டைத் துணைக்கழைத்து!
ஆகஸ்ட் 15அன்று தன்னுடைய விடுதலைநாளின் எழுபத்தைந்தாவது ஆண்டினைக் கோலாகலமாகக் கொண்டாடியது இந்தியா. ஆப்கனைவிட்டு விலகித் தான் விலகிச் செல்வதால், காபூலைத் தாலிபான்கள் தொண்ணூறு நாட்களில் கைப்பற்றி