தீர்வின் முடிச்சு தமிழர்களிடமே
தீர்வின் முடிச்சு தமிழர்களிடமே
தெற்கு, தென்கிழக்காசிய நாடுகள் இயலில் இந்தியாவின் முன்னணி நிபுணர்களில் ஒருவரான பேராசிரியர் வி. சூர்யநாராயண், சென்னைப் பல்கலைக்கழகத்தின் தெற்கு, தென்கிழக்கு நாடுகள் ஆய்வு மையத்தின் இயக்குநராகவும் மூத்த பேராசிரியராகவும் பணியாற்றியவர். இந்தியா, அமெரிக்கா, இலங்கைப் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் வருகைதரு பேராசிரியராகவும் இந்திய அரசின் தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
கேள்வி: இலங்கை அரசின் 13ஆவது சட்டத்திருத்தம்* மறுபடியும் தமிழர் பிரச்சினையை விவாதப் பொருளாக மாற்றியிருக்கிறது. சிங்கள-பௌத்த தேசியவாதக் குழுக்களில் ஒரு பிரிவினர் இந்தச் சட்டத்திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்திலிருந்து நீக்கப்படுவதுடன் மாகா