வாழ்க சலபதி!
வாழ்க சலபதி!
‘கோவை பாரதி பாசறை’ இவ்வாண்டுக்கான பாரதி விருதை ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு வழங்கியிருக்கிறது. பாரதியியலுக்குச் சேவை ஆற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது இது. பாரதி நினைவு நூற்றாண்டில் இவ்விருதைப் பெறுவதற்கு முழுத்தகுதியும் கொண்ட பாரதியியலாளர், சலபதி. தொகுப்பு, பதிப்பு, ஆய்வு ஆகிய முத்துறைகளிலும் அவர் பங்களித்திருக்கிறார். 1904முதல் 1921வரை பாரதி எழுதியவற்றைக் கண்டறிந்து தொகுப்பது பாரதியியலில் மிக முக்கியமானதாக விளங்கிவருகிறது. பத்திரிகையாளராக இருந்த பாரதி பெரிதும் பத்திரிகைகள் சார்ந்தே எழுதியுள்ளார். அவர் பணியாற்றிய, எழுதிய இதழ்களைக் கண்டடைவ