செந்நாய்: காட்சியில் தெளிதல்
செந்நாய்
காட்சியில் தெளிதல்
சாதியத்தின் துயரங்கள் பெண்களின் மீது குவிவதை மையப்பொருளாக்கியிருக்கிறது இந்தத் திரைப்படம். ஆற்காடு மாவட்டக் கிராமம் ஒன்றில் மயானப்பணிகளைச் செய்துவரும் விளிம்புநிலைக் குடும்பத்தின் கணவன் மனைவி இருவருக்கும் நடக்கும் சாதிய ரீதியான அழுத்தங்களுக்கு அந்தப் பெண்ணின் வாழ்வு பலியாவதும் அதே காலத்தில் அதே ஊரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞனைத் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண் ஆணவப்படுகொலை செய்யப்படுவதுமான இரண்டு சம்பவங்களை இணைத்து, காடு- மான்கள் - செந்நாய்கள் என்ற வாய்வழிக் கதையின் ஊடாக நேரியலற்ற திரைக்கதையமைப்பு (Non-Linear) முறையில் இந்தக் கதை படமாக்கப்பட்டிருக்கிறது.
<